கலெக்டர் சார்…. புகாரி ஹோட்டல்  கிரில் சிக்கன் சரியில்லை! நடவடிக்கை எடுங்கள் ப்ளிஸ்!

கலெக்டர் சார்…. புகாரி ஹோட்டல்  கிரில் சிக்கன் சரியில்லை! நடவடிக்கை எடுங்கள் ப்ளிஸ்!

 பா.சுரேஷ்,

 கிரில் சிக்கன், சாப்பாடு சரியில்லை என்று புகாரி ஹோட்டல் மீது புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன,

 செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் புகாரி ஹோட்டலில் தரம் அற்ற உணவு பரிமாற்றத்தால்,பல குடும்பங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால் ஹோட்டல் மீது சரமாரி புகார் தெரிவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி வேலை செய்யும் மோகன் - பவித்ரா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் புகாரி ஓட்டலில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது சிக்கன் நூடுல்ஸ், கிரில் சிக்கன் போன்ற உணவை ஆர்டர் செய்துள்ளனர்.

  மதியம் உணவு முடித்துக் கொண்டு தன்னுடைய சொந்தக்காரரின் இல்லத்திற்கு சென்றவுடன் அன்று இரவு கடும் வயிற்று வலி,வாந்தி மயக்கம் மற்றும் கடும் வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன.

  இதனால் அருகில் உள்ள ஊரப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் குணம் ஆகாததால் மேற்கொண்டு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு மோகன்- பவித்ரா மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 அதில் பவித்ராவும் தன்னுடைய ஒரு பெண் குழந்தையும் சற்று உடல் நலம் தேறிய நிலையில், கணவரும் அவடைய 6 வயது மகளும் தொடர்ந்து சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  மேலும் இது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதனால் வரை புகாரியின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பவித்ரா தெரிவித்துள்ளார்.

 மேலும், கூடுவாஞ்சேரி தனியார் மருத்துவமனையில் 41ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளது.

 அதே போல் ஊரப்பாக்கத்தை சேர்ந்த காதர்பாட்ஷா என்ற குடும்பத்தினரும் கடந்த 11ஆம் தேதி ஊரப்பாக்கம் புகாரி ஹோட்டலில் உணவு அருந்தி உள்ளனர். இதில் காதர்பாட்ஷாவின் மகளும் தன்னுடைய மைத்துனரும் இதேபோன்று தரமற்ற உணவை உட்கொண்டு பாதிப்புக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.       இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு சென்றும் கூட அவர்கள் ஆணியே பிடுங்கவில்லையாம்.  ஆகவே  உடனடியாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்  அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஊரப்பாக்கம் புகாரி ஹோட்டலை கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி பொதுமக்கள் கோருகின்றனர்.